Release Date : 12 அக்டோபர் 2௦25
மாதர் சங்க பஜனையும், மாலை பால நாட்டிய பேரொளி செல்வி சஞ்சனா வாஹினியின் சிறப்பு கலை நிகழ்ச்சி
தஞ்சாவூர் மகர்நோம்புச்சாவடி V.P. கோவில் தெருவில் அமைந்துள்ள ஸ்ரீதேவி பூதேவி ஶ்ரீ அலமேலு மங்கா ஸமேத ஸ்ரீ ப்ரஸன்ன வேங்கடேஸப் பெருமாள் திருக்கோவிலில் நேற்று (11.10.2025) புரட்டாசி நான்காம் சனிக்கிழமை முன்னிட்டு காலை 10 மணியளவில் மாதர் சங்க பஜனையும், மாலை பால நாட்டிய பேரொளி செல்வி சஞ்சனா வாஹினியின் சிறப்பு கலை நிகழ்ச்சியும், இரவு ததியாராதனத்துடன் விடையாற்றி விழா சிறப்பாக நடைபெற்றது.இதில் திரளான பக்தர்கள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர். புரட்டாசி சனிக்கிழமை பிரசாதம் உபயம் செய்த அனைவருக்கும் கோவில் நிர்வாகம் சார்பில் மனமார்ந்த நன்றி.நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாக பரம்பரை அறங்காவலர் திரு.B.S. சேஷாத்திரி அவர்கள், புரட்டாசி சனிக்கிழமை வாரவழிபாடு மன்றம் மற்றும் உபயதார்கள் செய்து இருந்தனர்.செய்தி: *தேனே T.P.குமரன், மகர்நோம்புச்சாவடி, தஞ்சாவூர்*
www.anandabhaskar.com