Release Date : 1௦ அக்டோபர் 2௦25
திசையன்விளை மனோ கல்லூரி பேராசிரியருக்கு பல்கலைக்கழக அளவிலான விருது
திருநெல்வேலி: மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் நாட்டு நலப்பணி திட்டம் (NSS) சார்பில் நடைபெற்ற “NSS PO’s Meet / University Level NSS Award & Viksit Bharath Yuwa Connect Programme” நிகழ்ச்சியில், திசையன்விளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக கல்லூரி வணிகவியல் துறை பேராசிரியரும் நாட்டு நலப்பணி திட்ட அலுவலருமான முனைவர் எஸ். பலவேசகிருஷ்ணன் அவர்களுக்கு, நாட்டு நலப்பணி திட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்டதற்காக பல்கலைக்கழக அளவிலான சிறந்த நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் (Best NSS Programme Officer) விருது வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் சுந்தரனார் மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. நிகழ்ச்சியில் முனைவர் வை. ஸ்ரீநிவாஸ், புவி தொழில்நுட்பத் துறை தலைவர், துவக்க உரையை வழங்கினார். முனைவர் சி. சாமுவேல் செல்லையா, பிராந்திய இயக்குநர், NSS இயக்குநரகம், சென்னை, தலைமை விருந்தினராக கலந்து கொண்டு விருதுகளை வழங்கினார். மேலும் முனைவர் என். ராஜலிங்கம், மேலாண்மைத் துறைத் தலைவர் மற்றும் முன்னாள் NSS ஒருங்கிணைப்பாளர், சிறப்பு உரை வழங்கினார். முனைவர் எம். பாண்டி, மதுரை காமராஜர் பல்கலைக்கழக NSS ஒருங்கிணைப்பாளர், வாழ்த்து உரை வழங்கினார்.இந்த நிகழ்ச்சியை முனைவர் ஏ. வெளியப்பன், NSS ஒருங்கிணைப்பாளர் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் சிறப்பாக ஒருங்கிணைத்தார்.
www.anandabhaskar.com