Release Date : 1௦ அக்டோபர் 2௦25
நெல்லை மாநகராட்சி ரூ.1.55 கோடி இழப்பீடு தர மா.க., வாரியம் பரிந்துரை
திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு இடங்களில், தாமிரபரணி ஆற்றில் கழிவு நீர் நேரடியாக கலப்பதால் மாநகராட்சி நிர்வாகம், 1.55 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரை செய்துள்ளது.திருநெல்வேலி மாநகராட்சியையொட்டி தாமிரபரணி ஆற்றில் கருப்பந்துறை, சி.என்.கிராமம், மீனாட்சிபுரம், கைலாச புரம், சிந்துபூந்துறை, வண்ணாரப்பேட்டை என பல்வேறு இடங்களில் கழிவுநீர் நேரடியாக கலக்கிறது.உயர்நீதிமன்ற நீதிபதிகள், அரசு உயர் அதிகாரிகள், அரசியல் கட்சி தலைவர்கள் ஆய்வு செய்து உத்தரவிட்ட பிறகும், கழிவுநீர் கலப்பது நிறுத்தப்படவில்லை.எனவே, கழிவுநீர் கலக்கும் மாநகராட்சி நிர்வாகம் மாதம்தோறும், 5 லட்சம் ரூபாய் வீதம் அரசுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என, மாசு கட்டுப்பாட்டு வாரியம் பரிந்துரைத்துள்ளது.
www.anandabhaskar.com